என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த மான்
- நாய்கள் கடிக்க துரத்தியது
- பொதுமக்கள் மீட்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கும்பினி பேட்டை வன பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வழிதவறி மான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. மானை நாய்கள் துரத்தி சென்றன.
இதை கண்ட பொது மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டனர். இதனை தொடர்ந்து பொது மக்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை வனத்துறையினர் சென்று மானை மீட்டு சென்றனர்.
Next Story






