என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சிறுமிக்கு ஆபாச படம் காட்டி மிரட்டிய வாலிபர் கைது
- போலீசில் புகார்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சலீம்பாஷா(37). இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு , தனது செல்போனில் ஆபாச படம் காட்டி, பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிகிறது. மேலும் சிறுமியிடம் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சலீம்பாஷாவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






