search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் தொழிலாளி தீக்குளிப்பு
    X

    ராணிப்பேட்டையில் தொழிலாளி தீக்குளிப்பு

    • மது குடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த பள்ளமங்க லம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு ( வயது 30 ). கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பிரபு மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதனை அறிந்த அவரது பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது . இதனால் மனவேதனை அடைந்த பிரபு ஏரிக்கரைக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார் .

    இவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று அவரை மீட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×