search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தவறி விழுந்து தொழிலாளி சாவு
    X

    தவறி விழுந்து தொழிலாளி சாவு

    • மாடிப்படி ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாஜ் புரா சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2-ம் தேதி இரவு வீட்டின் மாடிபடிக்கட்டில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.

    ஆபத்தான நிலையில் இருந்த ரமேஷை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×