என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
    X

    ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி

    • ஐசக் ஐயா வழங்கினார்
    • 300-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் பர்கூர், சயனாபுரம், சேந்தமங்கலம், பள்ளூர், அம்மனூர், கிரிபில்ஸ்பேட்டை, விண்டர் பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ஐசக் ஐயா அவர்கள் கலந்துகொண்டு ஏழை எளிய மக்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்.

    அவர் பேசுகையில்:-

    கிறிஸ்தவ தேவாலயத்தில் பணி புரிகின்ற உபதேசியார் மற்றும் பணியாளர் நல வாரிய விண்ணப்பத்தை அந்தந்த கலெக்டர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் பெற்று அதை பரிந்துரை செய்து சிறுபான்மை மாநில இயக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பி அனுப்பக் கூடாது.

    ஆதி திராவிட கிறிஸ்தவ சிறுபான்மை மற்றும் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அந்தந்த கல்லூரிகளுக்கு தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றார்.

    Next Story
    ×