search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.3.63 கோடியில் 567 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
    X

    நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அமைச்சர் காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் வளர்மதி.

    ரூ.3.63 கோடியில் 567 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் வருவாய் துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார். ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன். எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர சபை தலைவர் சுஜாதா வினோத், மேல்விஷாரம் நகர சபை தலைவர் முகமது அமீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மொத்தம் 567 பயனாளி களுக்கு தாலிக்கு தங்கம், தையல் எந்திரம், இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை உள்பட மொத்தம்

    ரூ.3 கோடியே 63 லட்சத்து 12 ஆயிரத்து 426 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    இதில் ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, அசோக்,வடிவேலு, நிர்மலா சவுந்தர், நகரசபை தலைவர்கள் ஹரிணி தில்லை, தமிழ்ச்செல்வி அசோகன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம் உள்பட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா நன்றி கூறினார்.

    Next Story
    ×