என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    336 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    336 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

    336 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் நல துறையின் மூலம் சிறுபான்மை யினர் உலமாக்கள் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 336 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், முகமது அமீன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) சத்ய பிரசாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×