search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி தொழிலாளி பலி
    X

    கோப்புப்படம்

    ரெயில் மோதி தொழிலாளி பலி

    • தண்டவாளத்தை கடந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் நாக லிங்கம் (வயது 32). இவர்சென்னையில் தனியார் நிறுவனத் தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை மோசூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்துள்ளார்.

    அப்போது சென்னை யில் இருந்து பெங்களூரு செல் லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த அரக் கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்தன் தலைமையிலான போலீசார், நாகலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×