என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிளகாய் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்
    X

    மிளகாய் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

    • ஒரு ஏக்கருக்கு ரூ.1178 செலுத்தி பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்
    • தோட்டக்கலை துணை இயக்குநர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதத்தை ஈடு செய்யும் வகையில் நடப்பு ராபி பருவத்தில் கத்தரி, வெண்டை, சீவப்பு மீளகாய், வாழை போன்ற பிராதன தோட்டக்கலைப் பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டின் ராபி பருவத்தில் மிளகாய் (சிவப்பு) பயிர்காப்பீடு செய்ய பள்ளூர்.பனப்பாக்கம், அரக்கோணம் வடக்கு, அரக்கோணம் தெற்கு பாராஞ்சி, சோளிங்கர் வேலம் மற்றும் பாணாவரம் குறுவட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் இந்த பகுதிகளில் மிளகாய் சிவப்பு, சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களான சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, மத்திய மாவட்ட கூட்டுறவு சங்கங்க ளிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ விவசாயிகள் செலுத்த வேண்டிய 5 சதவீத பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.1178/- செலுத்தி பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம்.

    மேலும் சிவப்பு மிளகாய் பயிர்காப்பீடு செய்ய நாளை சனிக்கிழமை கடைசி நாள் என்பதால் இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    Next Story
    ×