என் மலர்
உள்ளூர் செய்திகள்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமங்கை மன்னன் உற்சவம்
- மங்கல வாத்தியங்களுடன் அருள் பாலித்தார்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமங்கைமன்னன் பத்து நாள் உற்சவம் நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று திருமங்கை மன்னனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்ட தங்க கேடயத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்களு டன் சுவாமி சன்னதி தெருகோடி வரை சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






