என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போராட்டம்
- அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்
- போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் திலீப் (வயது 19). இவர் திருவலங்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி, முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் திலீப் வழக்கம் போல் நேற்று கல்லூரிக்கு சென்றார். கல்லூரியின் அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனைக் கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவலங் காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திலீப் உடலை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் திலீப்பின் உறவினர்கள் குவிந்தனர்.
சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திடீரென அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதானல் சமாதானம் அடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்