என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
    X

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட் டம், நெமிலியில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஆசிரியர் தின விழா, நெமிலி வட்டாரத்தில் இயக்கம் தொடங்கி 15-ம் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடை பெற்றது. நெமிலி வட்டார தலைவர் வையாபுரி தலைமை தாங்கினார். மாவட்ட பொரு ளாளர் முருகன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் குணசேகரன் கலந் துகொண்டு பேசுகையில், ஜாக்டோ-ஜியோ சார்பில் 4 கட்ட போராட்டங்கள் அறி விக்கப்பட்டிருந்தது.

    முதல் கட்டமாக கோட்டையை நோக்கி முற்றுகை போராட் டம் நடத்ததிட்டமிட்டு இருந் தோம். ஆனால் சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து வரு கிற காரணத்தினாலும், 3 அமைச்சர்களை கொண்ட குழு எங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி முதல்- அமைச்சருக்கு உங்கள் கோரிக்கையை தெரிவிப் போம் என்று கூறியதால் போராட்டத்தை கைவிட்டோம்.

    அகவிலைப்படியை நிலுவையுடன் சேர்த்து வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார். இதில் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×