என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெமிலியில் வாரச்சந்தை கட்டும் பணிகள் தீவிரம்
- ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைகிறது
- வியாபாரிகள் பாராட்டு
நெமிலி:
வேலூர் மாவட்டம் பொய்கை மாட்டு சந்தையை விட அதிகமாக கால்நடைகள் ஆடுகள் மாடுகள் போன்றவை விவசாயிகள் வியாபாரிகள் விற்பனை செய்யும் இடமாகவும் வாங்கி செல்லும் இடமாகவும் நெமிலி வாரச்சந்தை நிலவி வருகிறது.
இந்நிலையில் பஜார் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் வைப்பதற்காகவும் மேலும் ஒரு சில இடத்தில் உள்ள இறைச்சி கடை மற்றும் மீன் கடைகளால் பொதுமக்களும் மற்ற கடை வியாபாரிகளும் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் நெமிலி வாரச்சந்தை விரிவாக்கப்பட்டு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் வாரச்சந்தை கட்டிடங்கள் காய்கறி கடைகள் போன்றவை விரைவாக கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
இந்த வார சந்தை விரிவாக பணியினால் வியாபாரிகளும் பொதுமக்களும் பயனடையவார்கள் மேலும் வாரச்சந்தை விரிவாக கட்டிடப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு வருவதற்கு அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






