என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுவடை எந்திர வாகனம் மோதி டீக்கடைக்காரர் பலி
    X

    அறுவடை எந்திர வாகனம் மோதி டீக்கடைக்காரர் பலி

    • கடையை திறக்க பைக்கில் சென்றபோது விபத்து
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த அனந்தலை விவேகானந்தர் நகரில் உள்ள சோளிங்கர் ரோட்டில் வசிப்பவர் குப்பன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 41). டீ கடை நடத்தி வந்தார்.

    இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் டீக்கடையை திறப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மஞ்சு நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த நெல் அறுவடை செய்யும் எந்திர வாகனம் இவரது மோட் டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் ஈஸ்வரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×