என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    21 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
    X

    21 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

    • 36 வார்டுகளில் பொருத்தும் பணி தீவிரம்
    • குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெ ரிய நகராட்சியாக அரக்கோணம் விளங்குகிறது. 9 கிலோ மீட்டருக்கும் மேல் பரப்பளவை கொண்ட 36 வார்டுகள் உள்ளது.

    இங்கு, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வகிக்கின்ற னர். இந்நிலையில், அரக் கோணம் நகர மக்களின் பாதுகாப்பை கருதியும், குற்றச்செயல்களை கண் காணித்து தடுப்பதற்காக நகராட்சி முழுவதும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்த நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    நகராட்சியில் மொத்த முள்ள 36 வார்டுகளில் முதல் கட்டமாக 10 வார் டுகளில் சிசிடிவி கேமராக் கள் பொருத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    அதேபோல், நகராட்சி அலுவலகம் முழுவதும் பாதுகாப்பை கருதி 21 இடங்களில் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட்டு தினமும் அலுவலக பகு தியில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரக்கோணம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அரக்கோணம் நகரின் முக்கிய பகுதிகளில் குற்றங்களை குறைக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வும் அனைத்து இடங்களி லும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    36 வார்டுகளில் தற்போது 10 வார்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது. 4- வது வார்டில் கண்காணிப்பு பொருத்தப் பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும், 30-வது வார் டில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் செயல்பாட் டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

    தொடர்ந்து, மற்ற அனைத்து வாடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற் கொள்ளப்படும்.

    பாதுகாப்பை கருதி அலுவலக வளாகங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அரக்கோணம் நகரம் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு அதன் கண்காணிப்பு பணிகள் போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.

    Next Story
    ×