search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
    X

    சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்த காட்சி.

    சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

    • வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அழைப்பு
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது

    ராணிப்பேட்டை:

    ஆகஸ்ட் 15ம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மாவட்ட தலைநகரங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    அந்தந்த துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×