search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

    • திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று நிறுத்தினர்
    • 18 வயது பூர்த்தி ஆகாததால் நடவடிக்கை

    அரக்கோணம்:

    பாணாவரம் பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கும் வாலிபருக்கும் நாகுவேடு பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரிகள் மகளிர் போலீசார் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    இதை சற்று எதிர்ப்பாராத மணமகன் மற்றும் பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி ஆகி உள்ளது என அவரது ஆதார் அட்டையை காண்பித்துள்ளனர். இதை ஆதாரமாகக் கொண்டுதான் திருமணம் நடைபெற்றது என கூறினர்.

    அரசு அதிகாரிகள் இந்த ஆதார் அட்டை செல்லுபடி ஆகாது பள்ளி சான்றுகளில் ஏதோ ஒன்று காண்பியுங்கள் என கேட்டனர். பள்ளி சான்றில் 18 வயது ஆவதற்கு சில நாட்கள் உள்ளதால் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×