என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
    X

    கிரிக்கெட் போட்டியை மாவட்ட சங்க தலைவர் சந்தோஷ் காந்தி தொடங்கி வைத்த காட்சி.

    மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

    • 3 நாட்கள் நடக்கிறது
    • 8 மாவட்டங்களில் தொடங்கியது

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோரு க்கான மாநில அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இந்த கிரிக்கெட் லீக் போட்டிகள் ராணி ப்பேட்டை, பெரம்பலூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது.

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானம் மற்றும் ராணிப்பேட்டை பெல் டவுன்சிப் விளையாட்டு மைதானம் ஆகிய 2 இடங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி யை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் காந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    அதேபோல் பெல் டவுன்சிப் விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவரும், பெல் நிறுவன துணைப் பொது மேலாளருமான நாராயண சாமி தொடங்கி வைத்தார்.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் செல்வகுமார், துணைத் தலைவர்கள் பிரகாஷ், நாராயணசாமி, குமார், லட்சுமணன், நடராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போட்டி களுக்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×