search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சமுக வராகிக்கு தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை
    X

    பஞ்சமுக வராகிக்கு தங்க கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை

    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகள் ஆசியுடன் புதிதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தபட்ட வீரபத்திரர், ராஜ காளியம்மன், மூகாம்பிகை சன்னதிகளு க்கான மண்டலாபிஷேகம் ,ஸ்ரீவித்யா ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளுடன் நிறைவு பெற்றது.

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு 3 நாட்களாக நடைபெற்று வரும் நவ சண்டியாகம் இன்று நிறைவு பெறுகிறது. ஆடி மாத பஞ்சமியை முன்னிட்டு நேற்று வராகி ஹோமமும், பஞ்சமுக வராகிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பஞ்சமுக வராகிக்கு தங்க கவசத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

    Next Story
    ×