search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சமுஹ வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்
    X

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பஞ்சமுஹ வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடந்த போது எடுத்த படம்.

    பஞ்சமுஹ வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

    • ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ் சுவாமிகள் ஆக்ஞைப்படி நேற்று பஞ்சமி திதியை முன்னிட்டு பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வராஹி, காளி, சூலினி, திரிபுர, பைரவி என 5 முகங்களுடன் காட்சி தரும் ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு பிரதி பஞ்சமி திதி தோறும் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும்.

    அதன்படி நேற்று மாலையில் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு வராஹி ஹோமமும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைச்சல் பெருக, காரிய தடைகள் விலக, தோஷங்களிலிருந்து விடுபட, குடும்ப நிம்மதி போன்றவை உள்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக வராஹி அம்மனை வணங்கி தேங்காயில் நெய் வீட்டு தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×