என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கர் நகராட்சி ஆலோசனை கூட்டம்
    X

    சோளிங்கர் நகராட்சி ஆலோசனை கூட்டம்

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • வார்டு சபா என்ற புதிய திட்டம் அறிமுகம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சியில் வார்டு சபா அமைப்பது குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் வார்டு சபா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்ப டுத்தியுள்ளது.

    இதில் நகராட்சியில் 27 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் வார்டு உறுப்பினர் தலைமையில் நான்கு நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிய கூட்டம் நடத்தி கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கைகளை நகர மன்றத்தில் நடை பெறும் கூட்டத்தில் முன்வைத்து ஆலோசனை செய்யப்பட்டு பின்னர் தீர்மானம் நிறைவே ற்றப்பட்டு அந்த பணிகளை செயல்ப டுத்தப்படுத்துவது குறித்து கூட்டத்தில் வார்டு சபா திட்டத்தை பற்றி ஆலோ சனை செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் 27 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×