என் மலர்
உள்ளூர் செய்திகள்

கமலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
கமலவிநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம்
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கமல விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விடியற்காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கமல விநாயகர் சாமிக்கு பால், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரமாக வெள்ளிக் கவசம் அணிவித்து, வெட்டிவேர் மாலை, மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
கமலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






