என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செம்மரம் வெட்டி கடத்தல்
- ரூ.5 லட்சம் மதிப்பிலான கட்ைடகள் பறிமுதல்
- அத்துமீறி நுழைவோர் மீது கடும் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ஆற்காடு வனசரகர அலுவலகத்திற்கு உட்பட்ட பாணாவரம் காப்புகாடு பகுதியில் நேற்று வனத்துறை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காப்பு காட்டு பகுதியில் மரம் வெட்டும் சத்தம் கேட்டதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது கும்பல் செம்மரத்தை துண்டுகளாக வெட்டிக்கொண்டிந்தனர். வன ஊழியரகளை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஒடினர். அவர்களை விரட்டி சென்றதில் ஒருவர் பிடிபட்டார்.
அவர் திருத்தணி தாலூக்கா தாடூர் கிராமம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(46) என்பது தெரியவந்தது அவரை கைது செய்தனர்.வெட்டி கடத்த முயன்ற 17 செம்மர கட்டைகளை பறிமுதல் யெ்தனர். இதன் மதிப்பு ரூ.5லட்சம் என வனதுறையினர் தெரிவித்தனர்.
2014-ம் ஆண்டு பாணாவரம் காப்புகாடு பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தும் போது இதே நபர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என தெரிவித்தார். இனிவரும் காலங்களில் காப்புகாடு பகுதிகளில் அத்துமீறி நுழைவோர் மீதும் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீதும், வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்