போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை
போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று வாலாஜா போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது போலீஸ் நிலையத்தில் கோப்புகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் உள்பட போலீசார் உடன்இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com