என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோரம் வெட்டப்படும் மரங்களுக்கு பதில் மரக்கன்று நட வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- சாலை விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பல் வேறு இடங்களில் வாகன போக்குவரத்து வசதிக்காக சாலை விரிவாக்க பணிகள் நடை பெற்று வருகிறது.
இதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்படுகிறது. அப்படி வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மரக்கன்று நட வேண்டும். ஆனால் இதுவரை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஒரு மரக்கன்று கூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வேலம் பகுதியிலும் சாலை விரிவாக்கபணிக் காக மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்களுக்கு பதிலாக மரக்கன்று நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






