என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
    X

    விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள கமல விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு கமல விநாயகருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு கருமான் பிள்ளை யாருக்கு பால், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பட்டு வஸ்திரம் அருகம்புல் மாலை, மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் கிராமமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×