search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
    X

    ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • பக்தர்களுக்கு அண்ணதானம்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு கருமான் பிள்ளையாருக்கு திருநீறு ,சந்தனம்,பால், தயிர், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அருகம்புல்,எருகம் பூமாலை, மாலை மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் கடன் தொல்லை தீர்வும் , செல்வம் செழிக்கவும் தேங்காய் மாலை செலுத்தினார்கள்.

    இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். ஏற்பாட்டை பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெயா கோபி செய்திருந்தார்.

    Next Story
    ×