என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கரில் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட போர்டின் பேட்டை தெரு, வெங்கட்ராய பிள்ளை தெரு, லிங்கா ரெட்டி தெரு ஆகிய 3 தெருக் களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. 3 தெருக்கள் முதல் பாட்டிக்குளம் வரை உள்ள சாலைகள் குறுகியதாக இருக்கிறது.
இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மாறி செல்ல சிரமமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






