என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
    X

    வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

    • கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனசேகர், பிடிஓக்கள் சிவராமன், வேதமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் ரகு, மருத்துவ அலுவலர் வெற்றிச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×