என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்தர் கோவிலில் பிரதோஷ விழா
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த சோமச் முத்திரம் கிராமத்தில் அமைந் துள்ள ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவிலில் ஆனி மாத பிரதோ ஷத்தை முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது .
இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், பன்னீர், இளநீர், திருநீறு உள் ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து நந்தி பகவானுக்கு பலவண்ண மலர்கள், மலர்மாலை மற்றும் அருகம்புல் மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது . இதில் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் சோளிங்கர் அடுத்தகூடலூர் கிராமத்தில் அமைந் துள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் நந்தி பகவா னுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .






