search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்ச மஹா யக்ஞம் வாராகி யாகம்
    X

    அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்த போது எடுத்த படம்.

    பஞ்ச மஹா யக்ஞம் வாராகி யாகம்

    • ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வாராகி ஹோமத்துடன் பஞ்ச மஹா யக்ஞம் நடந்தது.

    பஞ்சமி திதியை முன்னிட்டு வாழ்வில் வளம் பல பெறவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் சூலினி, காளி, திரிபுர பைரவி, பகுளாமுகி, வாராகி என பஞ்சமுகங் களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக வாராகிக்கு விசேஷ மூலிகைகள், மஞ்சள் கிழங்கு, கோரைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, போன்ற எண்ணற்ற கிழங்கு வகைகளைக் கொண்டு சிறப்பான வாராகி ஹோமமும் பஞ்ச திரவிய அபிஷேகம், அர்ச்சனை மற்றும் வாராகி தீபம் ஏற்றப்பட்டது.

    அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசித்து சென்றனர். மேலும் சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சத்ரு சம்ஹார ஹோமமும் அபிஷேகமும் நடைபெற்றது.

    Next Story
    ×