search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடக்கும் பனப்பாக்கம் - உளியநல்லூர் சாலை
    X

    சேதம் அடைந்து காணப்படும் சாலை.

    2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடக்கும் பனப்பாக்கம் - உளியநல்லூர் சாலை

    • பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, பனப்பாக்கத்திலிருந்து உளியநல்லூர் செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.

    பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் இந்த வழியாக பனப்பாக்கம் அரசு மேல்நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் படித்து வரும் பள்ளி, மாணவர்கள் மற்றும் காஞ்சிபுரம், வாலாஜா செல்லும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

    வேலைக்கு செல்வோர் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த பொருட்களை பனப்பாக்கம், காஞ்சிபுரம் எடுத்து செல்ல இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

    அதிகமாக மக்கள் சென்றுவரும் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×