என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிகளவு மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பலி
- சிகிச்சைபெற்று வந்தநிலையில் பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வேலம் வாணிய தெருவை சேர்ந்தவர். தாயார் கெங்காபாய் (வயது 65). கெங்காபாய் தினமும் உடல்நிலை முன்னேற்றத்திற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
கடந்த 19ந் தேதி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை அருந்தியுள்ள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த கெங்காபாயை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






