என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் அருகே புதிய பள்ளி கட்டிடத்தை முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்த போது எடுத்த படம்.
ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் ரூ.14 லட்சத்தில் 2 புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்.ஒனறிய குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் செங்கல்நத்தம் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.14 லட்சத்தில் 2 புதிய வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, திறந்து வைத்தார். குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவர்கள் பயண்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் சானு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், சோளிங்கர் காங்கிரஸ் நகர தலைவர் கோபால் ஒன்றிய செயலாளர் கார்த்திக் ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.