என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.17 லட்சத்தில் வாராகி அம்மன் கோவிலில் புதிய மண்டபம்
- அடிக்கல் நாட்டு விழா நடந்தது
- ஒன்றிய குழு தலைவர் உள்பட பிரமுகர்கள் பங்கேற்பு
நெமிலி:
நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தில் ஸ்ரீஅரசாலையம்மன் மற்றும் வாராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வாராகி அம்மனை வேண்டி விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய அற்புத திருத்தலமாகும்.
வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்னை, பெங்களூர், வேலூர் காஞ்சிபுரம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பூசணிக்காயில் விளக்கு ஏற்றி அம்மனை வழிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் முன்புறம் மண்டபம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனையடுத்து உபயதா ரர்களான திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், ராமச் சந்திரன், நாகுஷா, கந்தசாமி, கன்னியப்பன் உள்ளிட்ட உபயதார்களின் மூலம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கோவில் முன்பு மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேல் மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்