என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
- ஆற்று பாலம் சேதமடைந்துள்ளதால் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
நெமிலி:
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன் வரவேற்றார்.
அப்போது சயனபுரம், சிறுணமல்லி, பின்னாவரம், கீழ்வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலனிகளில் சமுதாய கூடங்கள் அமைக்கவேண்டும். அரக்கோணம்-ஒச்சேரி சாலையில் அமைந்துள்ள கல்லாற்று பாலம் மற்றும் சேந்தமங்கலம் - பாணாவரம் சாலையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்று பாலம் சேதமடைந்துள்ளதால் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும்.
மேலும் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குப்பம், சயனபுரம், சித்தேரி, நாகவேடு, மகேந்திரவாடி,காட்டுபாக்கம்,
பொய்கைநல்லூர், சேந்தமங்கலம், நெடும்புலி, பனப்பாக்கம், அசநெல்லிகுப்பம் உள்ளிட்ட 12 பகுதிகளில் இயங்கிவரும் துணை சுகாதார நிலையங்களுக்காக புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்