search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய பேரிடர் மீட்பு படையில் தென்மண்டல டி.ஐ.ஜி. ஆய்வு
    X

    தேசிய பேரிடர் மீட்பு படையில் தென்மண்டல டி.ஐ.ஜி. சவுவ்கான் ஆய்வு செய்த காட்சி.

    தேசிய பேரிடர் மீட்பு படையில் தென்மண்டல டி.ஐ.ஜி. ஆய்வு

    • மோப்ப நாய் படை பிரிவினை பார்வையிட்டார்.
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    தேசிய பேரிடர் மீட்புப் 4 படை பிரிவில் புதிதாக பதவி ஏற்றுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் தென் மண்டல டி.ஐ.ஜி ஜி.எஸ்.சவுவ்கான் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவை பார்வையிட்டார்.

    படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேரிடர் மீட்புப் பணியில் உதவும் மோப்ப நாய் படை பிரிவினை பார்வையிட்டார். மோப்ப நாய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.

    தற்போது மீட்பு பணிக்கு உதவும் வகையில் 2 நாட்டு நாய்கள் பயிற்சியில் உள்ளது அதன் பயிற்சி முறைகளை கேட்டறிந்தார் பின்பு பேரிடர் மீட்புப் உபகரணங்களை ஆய்வு செய்தார்.

    மேலும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் கதிரியக்க வியல் துறையின் சார்பில் வீரர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதனையும் பார்வையிட்டார்.பின்பு முத்துகாடு படகு குழாம் அருகில் மீட்பு படை வீரர்களுக்கு நடைபெற்று வருகிறது.

    அதனையும் பார்வையிட்டு வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் உடன் படை பிரிவின் சீனியர் கமான்டன்ட் ரேகா நம்பியார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×