என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
    X

    தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை

    • வாலாஜா அரசினர் மகளிர் கல்லூரியில் நடந்தது
    • மாணவிகளுக்கு ெசயல் விளக்கம் காட்டினர்

    ராணிப்பேட்டை :

    வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில்,தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் சார்பில் நேற்று ஒத்திகை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    முகாமில் பேரிடர் மீட்பு குழு சப் -இன்ஸ்பெக்டர் மோகனரங்கன் தலைமையிலான குழுவினர் பேரிடர் மற்றும் விபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட்டு உயிர்களை காப்பாற்றுவது என்பது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திகைகள் மூலம் செயல் விளக்கம் அளித்தனர்.

    இதில் துணை தாசில்தார் வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×