என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனரமைப்பு பணியை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு
- ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- பணிகளை தரமாக மேற்கொள்வதோடு விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் மற்றும் அங்குள்ள கடைகளை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை தரமாக மேற்கொள்வதோடு விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது வாலாஜா நகரசபை தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகர தி.மு.க செயலாளர் தில்லை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story






