என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா பஸ் நிலையம் நவீனப்படுத்தும் திட்டம் குறித்து அமைச்சர் காந்தி ஆலோசனை
    X

    வாலாஜா பஸ் நிலையம் நவீனப்படுத்தும் திட்டம் குறித்து அமைச்சர் காந்தி ஆலோசனை

    • ரூ.1.90 ேகாடி செலவில் பராமரிக்கப்படுகிறது
    • அறிக்கை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    வாலாஜாபேட்டை:

    வாலாஜாபேட்டை நகராட்சியில் திடீரென அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். அவரை கமிஷனர் குமரி மன்னன், சேர் மன் ஹரிணி தில்லை மற்றும் அதிகாரிகள் வர வேற்றனர்.

    தற்போதுள்ள வாலாஜா பஸ் நிலையம் ரூ.1.90 ேகாடி செலவில் நவீனப்படுத்தும் திட்டத்தை தொடங்கி பணிகளை விரைவாக முடிப்பது குறித்து நகராட்சி கமிஷனர் குமரி மன்னன், சேர்மன் ஹரிணி தில்லை, துணை சேர்மன் கமல ராகவன் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் காந்தி ஆலோசனை நடத்தினார்.

    மேலும், நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்தும், நகராட்சிக்கு வருவாய் உருவாக்கும் திட்டமாக தற்போதுள்ள வணிக வளாகங்கள் அடங்கிய நகராட்சி கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதி தாக வணிக வளாகம் நவீன முறையில் 'மால்' போன்று கட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

    Next Story
    ×