search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    • பெற்றோர்கள் எதிர்ப்பு
    • வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் சரவணன்.இவருடைய மகன் சூரியபிரசாத். வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், சின்னதகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் கவுதமி என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சரவணனும், கவுதமியும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    இது சம்பந்தமாக நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதல் கணவருடன் இளம் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    Next Story
    ×