என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது
- 31 பாட்டில்கள் பறிமுதல்
- கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பந்தாங்கள் பகுதியில் அனுமதியின்றி அரசு மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவேரிப்பாக்கம் சப் - இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
மது விற்றவரை பிடித்து விசாரித்ததில் அவர் எடையன்தாங்கல் கிராமத்தை ேசர்ந்த லட்சுமணன் (41) என்பதும் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து லட்சுமணனை கைது செய்து அவரிடமிருந்து 31 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






