என் மலர்
உள்ளூர் செய்திகள்

லட்சுமி நாராயணசாமி கருட சேவை விழா
- சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சாமி வீதி உலா
- பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயணசுவாமி கோவில் உள்ளது.
கடந்த வாரம் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் நிறைவு நாளான நேற்று கருடசேவை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக லட்சுமி நாராயண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






