என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை கடத்திய வாலிபர் கைது
    X

    சிறுமியை கடத்திய வாலிபர் கைது

    • போக்சோ சட்டம் பாய்ந்தது
    • பைக்கில் சென்றவரை மடக்கிப் பிடித்தனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22)இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணை யுவராஜ் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 16 வயது சிறுமியை கடத்தியவர் மீது பெண்ணின் தந்தை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது ஜாகீர் தண்டலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த யுவராஜ் மற்றும் 16 இளம்பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்து போச்சோயில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×