search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் நகை-பணம் திருட்டு
    X

    கோவிலில் நகை-பணம் திருட்டு

    • 3 உண்டியல்களை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட் சிக்கு உட்பட்ட மலைமேடு கிராமத்தில் மலைமீது குமரன் கோவில் உள்ளது. இங்கு தின மும் ஏராளமன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து வள்ளி, தெய் வானை கழுத்தில் இருந்த 4/2 பவுன் மாங்கல்யம், 3 உண்டி யல்களை உடைத்து சுமார் ரூ.30 ஆயிரம் பணம் ஆகிய வற்றை திருடிச்சென்றுள்ளனர்.

    நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற நிர்வாகிகள் பூட்டு உடைக்கப் பட்டு நகை மற்றும் பணம். திருடப்பட்டிருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர்.

    Next Story
    ×