என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போதை பொருள் விழிப்புணர்வு மனித சங்கிலி
- பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு
- அமைச்சர் காந்தி பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் பள்ளிக்கல்வி துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் போதை பழக்கத்திற்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், டி.எஸ்.பி பிரபு, நகர செயலாளர் பூங்காவனம், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், வினோத், குமார், ஜெய்சங்கீதா அசேன் உள்பட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்