search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிப்காட் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
    X

    சிப்காட் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவில் வளாகத்தில் 18 அடி உயரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நேற்று அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு காலை அஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் 18 அடியில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. பூமாலை, 1008 வடமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவித்து பல்வேறு வண்ண மலர்களால் பூஜை செய்து சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தி மஹா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×