என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வியாபாரி கைது
    X

    கஞ்சா வியாபாரி கைது

    • 1 கிலோ 300 கிராம் போதை பொருள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசார் நிலையத்திற்கு புகார் வந்தது. இந்த நிலையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது முட்பதரில் பதுக்கி கஞ்சாவை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×