என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெமிலி சீனிவாச பெருமாள் கோவிலில் பூ அங்கி சமர்ப்பண விழா
- மாதுளை பழ முத்துக்களால் அர்ச்சனை நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
நெமிலி:
நெமிலியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று பூ அங்கி சமர்ப்பண விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி. பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பூக்களால் அங்கி உடுத்தி, மாதுளை பழ முத்துக்களால் அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.
இதில் நெமிலி, ரெட்டிவலம், சேந்த மங்கலம், பனப்பாக் கம். சயனபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






