என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தின் முதல் இயற்கை எரிவாயு நிலையம்
    X

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் இயற்கை எரிவாயு நிலையத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்த போது எடுத்த படம்.

    தமிழகத்தின் முதல் இயற்கை எரிவாயு நிலையம்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்
    • அமைச்சர் காந்தி இயற்கை எரிவாயுவை ஆட்டோவிற்கு செலுத்தி தொடங்கி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் தமிழகத்தின் முதல் இயற்கை எரிவாயு நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இந்த இயற்கை எரிவாயு நிலையத்தினை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிலையத்தில் திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை ஆட்டோவிற்கு செலுத்தி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×